அதிரையில் ஒரு மீன் 1,80,000 ரூபாய்க்கு ஏலம் போனது(வீடியோ இணைப்பு).!

 


தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில்  கடல் சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் உள்ள  மீன் மார்க்கெட்டுகளுக்கு பல்வேறு வகை மீன்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கும். குறிப்பாக இப்பகுதியில் அதிக அளவில்  உற்பத்தியாகும் கொடுவா, கெண்டை, வெள்ளாம்பொடி, கத்தாழை போன்ற மீன்கள் இப்பகுதியில் உள்ள அதிக அளவில் விற்பனைக்கு வரும்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த ரவி என்பவரது நாட்டுபடகில் கத்தாழை மீன் பிடிப்பட்டது,இந்த மீன் மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு ஒரு லட்சத்து எண்பதாயிரத்துக்கு ஏலம் போனது.



Post a Comment

Previous Post Next Post