பட்டுக்கோட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்

 


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம்) வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தலைமையில் எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நடத்தப்படவுள்ளது. 


இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் வட்டங்களுக்கு உட்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post