மல்லிப்பட்டினத்தில் OMCAR FOUNDATION சார்பில் மீனவர்களுடன் கலந்துரையாடல் ..!!




தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் ஓம்கார் பவுண்டேசன் சார்பில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விசைப்படகு மீனவர் நல சங்க மாநில செயலாளர் A.K தாஜூதீன் அவர்களும், நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் S.R.K முஹம்மது ரஃபீக் அவர்களும் தலைமை தாங்கினார்கள் .இதில் மீனவர்களின்‌ தேவை குறித்தும், மீனவர்களுக்கு ஏற்றுமதி-இறக்குமதி குறித்தும் முழு கல்வி அளிக்கப்பட்டது.இந்தத் துறையை சேர்ந்த அதிகாரிகள் மீனவர்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post