எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு, கட்சியின் மாநில துணை தலைவர் பங்கேற்பு. !



தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டிணம் கட்சி  அலுவலகத்தில் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் SDPIகட்சி தஞ்சை தெற்கு  மாவட்ட தலைவர் முகம்மது ரஹிஸ் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொதுசெயலாளர்  முகம்மது சேக்தாவுது  வரவேற்புரை வழங்கினார்.


சிறப்பு அழைப்பளராக கட்சியின் மாநில துணை தலைவர் B.அப்துல்ஹமிது அவர்கள் பங்கேற்று  ஆலோசனை வழங்கி அதை தொடர்ந்து மாநில செயற்ககுழு உறுப்பினரும் மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்கினர்.

SDPI மாவட்ட நிர்வாகிகள் துனை தலைவர் சாகுல்ஹமிது,மாவட்ட செயற்குழு உறுப்பினர் புகாரி மற்றும் பட்டுக்கோட்டை நகர தலைவர் இலியாஸ், சாகுல் அதிரை நகர செயலாளர் ரஜபு ,இனை செயலாளர் நசிர்அஹம்மது ,மல்லிபட்டினம் நகர தலைவர் ஜவாஹிர்,செயலாளர்  பாவா, மதுக்கூர் நகர தலைவர் அசார்,செயலாளர் பிலால் ,செம்பை கிளை தலைவர் அன்வர், சேதுபாவசத்திரம் கிளை தலைவர் முத்து மரைக்கான்,செயலாளர் வகி மன்சூர்செந்தலை கிளை தலைவர கலில் செயலாளர் சேக் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தீவிர உறுப்பினர் சேர்க்கை,அரசியல் பயிலரங்கம் நடத்துவது,அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, இந்தியாவில் இஸ்லாமியர்களுடைய அடையாளமான  கியான் வாபி பள்ளிவாசல் அழிக்க துடித்துக் கொண்டிருக்க கூடிய பாசிச பாஜகவை அரசை கண்டித்து. போஸ்டர் ஒட்ட வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.








Post a Comment

Previous Post Next Post