குஜராத் கேபிள் பாலம் விபத்தில் 80க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றிய தௌபிக் மற்றும் ஹூசைன் பதான்.!


அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள பாலம் அறுந்து விழுந்ததில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த தௌபிக் சுமார் 35க்கும் மேற்பட்டோரை மீட்டு அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.நீச்சல் தெரிந்த ஹூசைன் பதான் என்ற இளைஞர் நீருக்குள் மூழ்கியவர்களை 50 பேர் வரை உயிருடன் மீட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்காக போராடியவர்களை மீட்ட இருவரையும் பாராட்டி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post