தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடைகள்,பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பட்டுக்கோட்டை நோக்கி படையெடுத்தனர்.கடந்த மூன்று நாட்களாக மக்கள் வெள்ளத்தில் பட்டுக்கோட்டை மிதந்தது.பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக களையிழந்து காணப்பட்ட பட்டுக்கோட்டை, இம்முறை மக்களின் வெள்ளத்தால் மிதந்தது.
மேலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளையும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பட்டுக்கோட்டை காவல்துறை மேற்கொண்டு இருந்தது.
Post a Comment