தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மற்றும அதனை சுற்றியுள்ள பகெதிகளில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் நேற்றைய தினம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கடந்த பத்துநாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று(அக்.9) அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கி தற்போது வரை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment