ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில் சிங்கப்பூர் கூடம்

எகிப்­தின் ஷார்ம் எல் ஷேக் நக­ரில் நடக்­கும் ஐநா ‘COP 27’ மாநாட்­டில் சிங்­கப்­பூர் தனது முத­லா­வது கூடத்­தைத் திறந்து இருக்­கிறது. அந்­தக்கூடம், பரு­வ­நிலை பாதிப்­பு­களைக் குறைத்து சுற்றுச் சூழலைப் பாது­காப்­ப­தற்கு சிங்­கப்பூர் கொண்­டுள்ள கடப்­பா­டு­களை­யும் பசுமை நிதி வளம், சூரிய மின்­சக்தி போன்ற துறை­களில் இடம்­பெ­றக்­கூ­டிய சிங்­கப்­பூ­ரின் புத்­தாக்­கங்­க­ளை­யும் வெளிப்­ப­டுத்­தும் காட்­சிக்கூட­மாக திகழ்­கிறது. ‘எதிர்­காலப் பசுமை சாத்­தி­யங்­களைப் பலப்­ப­டுத்­து­வோம்’ என்ற கருப்­பொ­ரு­ளு­டன் கூடிய அந்­தக் கூடம், நிறு­வ­னங்­கள், ஊட­கம், கல்­வித் துறை, அனைத்­து­லக அமைப்­பு­கள், அர­சாங்­கம் சாரா அமைப்­பு­கள் ஆகி­யவை அடங்­கிய 100க்கும் மேற்­பட்ட பங்­கா­ளி­க­ளின் கூட்டு முயற்­சி­யாக இடம்­பெ­று­கிறது. வர­வேற்பு உரை ஆற்­றிய நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, அந்­தக் கூடம் சிங்­கப்­பூ­ரின் சுற்றுச்சூழல் விருப்பங்­க­ளைப் பிரதி­நி­திப்­ப­தா­கத் தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் வரும் 2050வது ஆண்டுவாக்­கில் அறவே கரி­மக் கழிவு இல்­லாத சாத­னையை நிகழ்த்த வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது. சிங்­கப்­பூர் கூடம் தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன், ஆசியா 2050ஆம் ஆண்டுவாக்­கில் அறவே கரி­மக் கழிவு இல்­லாத சாதனையை நிகழ்த்த உத­வு­வ­தற்­குத் தேவைப்­படக்கூடிய மூல­த­னத்­தைத் திரட்டு ­வ­தில் சிங்­கப்­பூர் இன்றியமையாத பணியை ஆற்ற முடி­யும் என தெரி­வித்­தார். ஐநா சுற்­றுச்­சூ­ழல் மாநாட்­டில் உல­கைக் கவ­ரும் வகை­யில் 100க்கும் மேற்­பட்ட கூடங்­கள் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. அந்த மாநாடு இம்­மா­தம் 18ஆம் தேதி வரை நடக்­கிறது.

Post a Comment

Previous Post Next Post