தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு காஸா உடன் நாங்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்து ,போர் நிறுத்த விதிகளை மீறி காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து தேசம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளி வாசலில் கண்டன முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கண்டனம் முழக்க ஆர்ப்பாட்டத்தில் SDPI மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்துகொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினார்.
இதில் ஜமாத்தார்களும், பொதுமக்களும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
Post a Comment