தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செந்தலைப்பட்டினம் கடலோர கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது.
இதில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெருமகளூர் பேரூராட்சி, கே.ஆர். புரம் விவேகானந்தா நகரைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் மாரிமுத்து (39) வேலை செய்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை, இறால் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்பவ இடத்திலரேயே உயிரிழந்தார்.
அவரது உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மாரிமுத்துவுக்கு ரேகா என்ற மனைவியும் தர்ஷா என்ற 5 வயது மகனும்,தர்ஷினி என்ற 3 வயது மகளும் உள்ளனர்
Post a Comment