மக்களுடன் மக்களாக இருந்து அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் ..!! அ.ம.மு.க, எஸ்.டி.பி.ஐ‌ கூட்டணியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் மல்லியில் பேச்சு ..!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தஞ்சையில் திமுக, அமமுக,அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இது தவிற சுயேச்சைகளும் களம் காண்கின்றனர். வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

அமமுக எஸ்.டி.பி. ஐ கூட்டணி கட்சி சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் முருகேசன் அவர்கள் இன்று (8/4/2019) மதியம் 1:30 மணி அளவில் மல்லிப்பட்டினத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் மக்களுடன் இருப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன், எனக்கு தேவையான சொத்துக்கள் என்னிடத்தில் உள்ளது. நான் இனியும் பணம் சம்பாதிக்க தேவையில்லை. மக்களுடன் மக்களாக இருந்து என்னால் முடிந்த அளவிற்கு இந்த ஐந்து வருடம் உங்களுக்காக உதவி செய்வேன்,  மற்றும் தேர்தல் அறிக்கையில் உள்ள படி மல்லிப்பட்டினத்தில் கடல் வாழ் உயிரின பூங்கா அமைப்பதற்கு முழு நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினார். விவசாயம் மற்றும் மீனவர்களுக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன் எனக்கூறி அனைவரும் பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும்





Post a Comment

Previous Post Next Post