விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார் மல்லிப்பட்டினம் A.K தாஜுதீன் அவர்கள் ..!!




தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநில செயலாளராக மல்லிப்பட்டினத்தை சார்ந்த A.K தாஜுதீன் அவர்கள் இருந்து வந்தார். இவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசிடமிருந்து பல நிவாரண உதவிகளையும் பெற்றுத்தர போராடி வந்தார். தற்பொழுது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று சென்னையில் (19/05/2019) நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் மாநில தலைவர் k.அன்பழகனார் அவர்கள் முன்னிலையில் மல்லிப்பட்டினத்தை சார்ந்த A.k தாஜுதீன் அவர்கள் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

Post a Comment

Previous Post Next Post