500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய மதுக்கூர் இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் மாணவர்கள்!

தமிழ்நாடு முழுவதும் டெங்குகாய்ச்சல் சமீப நாட்களாக மழையின் காரணமாக  அதிகமாக பரவி வருகிறது .

இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பரவிவரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் நகரில் முக்கூட்டுசாலை, பஸ் ஸ்டான்ட் மற்றும் சில பொது இடங்களில்  மதுக்கூர் இஸ்லாமிய முன்னேற்ற சங்கம், சார்பாக  மாணவர்கள் ஒன்றிணைந்து நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.

500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கசாயம் வழங்கப்பட்டது நல்லதோர் முயற்சியை மேற்கண்ட மதுக்கூர் இஸ்லாமிய முன்னேற்ற சங்க மாணவர்களுக்கு மல்லி நியூஸ் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.














Post a Comment

Previous Post Next Post