அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் .
மௌலானா அவர்கள் வாகனத்தை மெதுவாக இயக்கி வந்த நிலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்ததாக பொதுமக்கள் சொல்வது குறிப்பிடத்தக்கது. மௌலானா அப்துல் ரஹீம் இறந்த செய்தி அதிரையை உலுக்கி இருக்கிறது.அதிரையில் தொடர்ந்து வாகன விபத்துகளால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்வோம்....
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeletePost a Comment