நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான சென்னை மாணவன் உதித் சூர்யாவை போல் கோவையில் இரண்டு பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து நடந்த விசாரணையில், அந்த இரண்டு பேரில் (1 மாணவர், 1 மாணவி) மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாணவியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகின்றனர்.


Post a Comment