தமிழகத்தின் தலைநகரத்தில் களமிறங்கிய கமாண்டோ படையினர்..!!!



*ஓடவும் முடியாது...!!*
*ஒளியவும் முடியாது...!!*

சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.

 தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை.

 இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை. இதனால் தற்போது கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.

*மல்லி நியூஸ்*

Post a Comment

Previous Post Next Post