பட்டுக்கோட்டை சார்ந்த சலீம் மரணத்தில் மர்மம் ...!!! களத்தில் மனித உரிமை ஆனையம் ...!!!


பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மைதீன் ஜுவல்லரி உரிமையாளர் சகோதரர் #சலீம் அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்.,

தஞ்சை #கேஜி_மருத்துவமனை அளித்த கொரானா வைரஸ் பரிசோதனை சான்றில் குளறுபடிகள் மற்றும் முரண் இருப்பதாகவும்.,

இறந்துபோன சலீம் அவர்களின் உடலிலிருந்து உடல் உறுப்புகள் #திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும்.,

இன்னும் ஒரு படி மேலே...
இறந்து போனதாக சொல்லப்பட்ட சலீம் அவர்களின் உடலை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களாகிய எங்களை பார்க்க விடவில்லை, மேலும் அந்த உடல் இறந்துபோன சலீம் உடல் தானா என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது எனவும்.,

புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்து எங்களுக்கு நீதி வழங்கிட வேண்டுமென்றும்.,
தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குனர், தமிழக முதலமைச்சர் போன்றோருக்கு பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு #சலீம் குடும்பத்தினர் கோரிக்கை மற்றும் புகார் மனு அளித்திருக்கும் நிலையில்....

உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க

பட்டுக்கோட்டை சலீம் மரணத்திற்கு நீதி வேண்டியும்,புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் நிலையில்.... விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மனித #உரிமைகள் கவுன்சில் ஆஃப் #இந்தியா NHRC OF INDIA தஞ்சை மாவட்ட அமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் S.R.K.அசன் முகைதீன் , #மாவட்ட_துணைத்_தலைவர் M.அயூப் கான் மற்றும் தஞ்சை மாவட்ட உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை #சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Post a Comment

Previous Post Next Post