குடியிருப்புக்களில் தேங்கிய மழைநீர் அகற்ற உதவிய ஊராட்சி மன்ற தலைவர்.!

மல்லிப்பட்டிணம் பகுதிகளில் நேற்று(அக்.15) இரவில் கனமழை பெய்தது. இதன்காரணமாக வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்தது.இதனையொட்டி இன்று திப்புசுல்தான் தெரு,காதிரியார் தெரு ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி பணியாளர்கள் பள்ளம் வெட்டி வாய்க்காலில் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னாவும் சேர்ந்து வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post