தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை முக்கிய அறிவிப்பு.!

தஞ்சை மாவட்ட நாட்டுபடகு மீனவர்களின் மீன் பிடி வலைகளை காரைக்கால் மாவட்ட விசைபடகு மீனவர்கள் சேதபடுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனால் மீனவர்கள் அதிகளிவில் சேதத்திற்குள்ளாகின்றனர்.

ஆகவே இது போன்ற நிகழ்வுகளில் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை சார்நிலை அலுவலர்களுக்கு தெரியப்படுத்தினால் உடன் ரோந்து பணி மேற்கொண்டு தடுத்திட வகை செய்யலாம். ஆதலால் மீனவர்கள் மீன்பிடிப்பின் போது காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் விசைப்படகுகள் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் கரைப்பகுதிகளில் மீன் பிடிப்பதை கண்டறிந்தால் உடனடியாக மீன்வள மற்றும் மீனவர் நலதுறைக்கு தகவல் தெரிவிக்க  வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.


சாகர் மித்ரா பணியாளர் -6385238496

மீன்வள ஆய்வாளர்(மல்லிப்பட்டினம்)-9789338982

சார்ஆய்வாளர்(சேதுபாவசத்திரம்)-9952226545

கடலோர அமலாக்கப் பிரிவு சார் ஆய்வாளர்(மல்லிப்பட்டினம்)-94436 62272 

மீன்வளம் மேற்பார்வையாளர்(தஞ்சாவூர்)-94427 29981

உதவி இயக்குனர்(தஞ்சாவூர்)-+91 98427 44864

Post a Comment

Previous Post Next Post