மல்லிப்பட்டினத்தில் மூன்று திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நிதி ஒதுக்கீடு.!

 


தஞ்சை மாவட்டம் சரபேந்திராஜன்பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் புதுமனை தெருவில்~கே ஆர் காலணி இணைப்பு சாலை ரூபாய் பத்து லட்சமும்,மல்லிப்பட்டினம்  புதிய நியாய விலை கடை அமைப்பதற்கு 16 லட்சமும், ஷாபி இமாம் தெருவில் 435 மீட்டர் தார் சாலை ஊராட்சி மன்றத்தலைவரின் விருப்ப நிதியிலும் அமைக்கவும் ஆகிய மூன்று திட்டங்களுக்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா தகவல்.

இந்த மூன்று திட்டங்களும் இப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post