மல்லிப்பட்டினம் மமக அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்.!



 தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி கிளை அலுவலகத்தில் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டது. மல்லிப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகது  மற்றும் மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பின் தமிழ்மாநில தலைவர் Dr.அசன்முகைதீன் ஆகியோர் கலந்துக்கொண்டு தேசிய கொடியினை ஏற்றினார்.

மேலும் மிகவும் நலிவடைந்த பத்து பயனாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் மமக நிர்வாகிகள்,பொதுமக்கள்  கலந்துக்கொண்டனர்.





Post a Comment

Previous Post Next Post