இயக்குநர் அமீர் குறித்து பேசிய கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா...

இயக்குநர் அமீர் குறித்து தான் பேசிய கருத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். “நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், என்றைக்குமே அமீர் அண்ணா என்று தான் அவரை கூப்பிடுவேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post