பட்டுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!



 தஞ்சை தெற்கு மாவட்ட அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பட்டுக்கோட்டையில் கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சி. வி. சேகர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. எம்ஜிஆர். மன்ற இணை செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் மலை அய்யன், இளைஞர் அணி இணை செயலாளர் ஜவகர் பாபு, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்
எஸ். டி. எஸ். செல்வம், மாவட்ட தலைவர் உதயகுமார், மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் ஆசைத்தம்பி, ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், மலை முருகேசன், தண்டாயுதபாணி கோவிஇளங்கோ, துரைமாணிக்கம் மதியழகன், அருணாசலம், நகர செயலாளர்கள் பிச்சை, நீலகண்டன், ஆனந்த், பொருளாளர் செல்லநாகராஜன், நகரசபை துணைத் தலைவர் சுரேஷ், முன்னாள் நகர செயலாளர்கள் பாரதி, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post