தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மல்லிப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் கங்கேஸ்வரி முகாமை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் தலைமையில் முகாம் நடைபெற்றது.மீன்வள மேற்பார்வையாளர் சார்லஸ், சாகரமித்ரா பணியாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். ஏராளமான மீனவ மகளிர்கள் கலந்து கொண்டு நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு ஆர்வமாய் இருந்தனர்.





Post a Comment