மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுக்கூரில், இன்று(டிச.20) மாலை 5 மணியளவில் முக்கூட்டுச்சாலையில், மாவட்டத் தலைவர் அதிரை இத்ரீஸ் அவர்கள் தலைமையில் புரட்சியாளர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கார் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய பாஜகவின் ஒன்றிய உள்துறை அமித்ஷாவை கண்டித்தும், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும், ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் மல்லிபட்டினம் ஃபஹத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள், தமுமுக மமக மாவட்ட பேரூர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் அத்தி.பெ.வீரையன்,CPI(M) ஒன்றிய செயலாளர் வை.சிதம்பரம், திமுக தலைமை கழக பேச்சாளர் மெட்ரோ.டி.சேகர், தமுமுக மமக முன்னாள் மாவட்ட தலைவர் ஃபவாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment