மல்லிப்பட்டினத்தில் சிறப்பாக நடைப்பெற்ற மக்தப் மதரசாவின் மூன்றாம் ஆண்டு விழா

*மல்லிப்பட்டினத்தில் சிறப்பாக நடைப்பெற்ற மக்தப் மதரசாவின் மூன்றாம் ஆண்டு விழா*

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் சார்பாக  நடத்தப்பட்ட  தீனியாத் மக்தப் மதரசா 3 ஆம்   ஆண்டுவிழா நிகழ்ச்சி நேற்று 24.04.2019 .புதன் கிழமை ,ஜும்மா பள்ளி வளாகத்தில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது .


இவ்விழாவிற்கு மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் KMM அல்லாபிச்சை தலமை தாங்க.
மன்ற  தலைமை குழுவினர்  மற்றும் மல்லி ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி மிகப் சிறப்பாக நடைபெற்றது

 மேலும் இந்நிகழ்விற்கு சிற்ப்பு அழைப்பாளராக
A.முஹமது ரிழா பாகவி வருகைபுரிந்து சிறப்புரையாற்றினார் .
மற்றும்  ஜூம்மா  பள்ளி ஜமாத் நிர்வாகிகள் ,. மதரசா இமாம்கள்  ,சமுதாய நல மன்ற உறுப்பினர்கள் ,தலமைகுழு உறுப்பினர்கள் சிற்றுரையாற்றினார்க ள்
மேலும் மல்லி ஜமாத்தார்கள்,மதராஸா மாணவ மாணவிகள் பெண்மணிகள்  என அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர் .

மேலும் மக்தப் மதரஸாவின் மானவ மானவிகளின் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல மானவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி
பரிசு பொருட்களை தட்டி சென்றனர் .

Post a Comment

Previous Post Next Post