மல்லிப்பட்டிணத்தில் திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்..!

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்,வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி அருகே சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹபீப் முகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுகவின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post