பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் தலைநகரில் எஸ்டிபிஐ கட்சி மிகப்பெரிய பேரணி..!

 




தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்கிற இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த பேரணி நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் ரத்தினம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, அபுபக்கர் சித்தீக், நஜ்மா பேகம் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர். மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா தொகுப்புரை வழங்கினார். மாநில செயலாளர் ஏ.கே.கரீம் நன்றியுரையாற்றினார்.


மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சபீக் அஹம்மது, முகம்மது ரஷீத், பஷீர் சுல்தான், அஸ்கர் அலி, ரவிச்சந்திரன், சென்னை வடக்கு மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில், சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்களான ஜூனைத் அன்சாரி, சலீம் ஜாபர், பூட்டோ மைதீன், சீனி முகம்மது, அப்துல் ரசாக், முகமது பிலால், செய்யது அஹமது, வழ.நவ்பில், ஆர்.எம்.கே.மாலிக், ஜூபைர் அலி, ஜாபர் ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பேரணியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முன்னாள் தமிழக அமைச்சர், அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, சென்னை ஐகோர்ட்டு மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் எம்.ராஜேஸ்வரி பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post