மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தொடர்ந்து தஞ்சை மாவட்ட மீன்வளத்துறையினர் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்தனர்.இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்ட விசைபடகுகளும், 2000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.
இந்நிலையில் ஃபெஞ்சால் புயல் கரையை கடந்த நிலையில் புயல் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது,இதனால் தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று(டிச.2) மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.முன்னதாக மீனவர்கள் அவர்களுக்கு தேவையான டீசல், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைபடகுகளில் ஏற்றினர்.
Post a Comment