அடுத்த 48, 72 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை வாய்ப்பு.!

 


இலங்கைக்கு தென்கிழக்கே நிலவி வரும் காற்று சுழற்சியின் காரணமாக அடுத்த 48, 72 மணி நேரத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு.

குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே, பல பகுதிகளில் கனமழைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் லேசான, மிதமான மழைக்கும் ஒரு சில பகுதிகளில் சற்று கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 

மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் ஆங்காங்கே, ஒரு சில பகுதிகளில் லேசான, மிதமான மழை இருக்கக்கூடும்.

மற்ற மாவட்டங்களில் ஒரிரு பகுதிகளில் லேசான, மிதமான மழை இருக்கக்கூடும்.

Post a Comment

Previous Post Next Post