தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி மண்டபத்தில் 15வது இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு கிளை தலைவர் முஹம்மது கனி தலைமை வகித்தார்,மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ்,மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டு 33 யூனிட் இரத்தம் தானம் செய்தனர்.
தானமாக பெற்ற இரத்தத்தை மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் முஸ்தபா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கிஷோரிடம் ஒப்படைத்தார்.
இம்முகாமை கிளை நிர்வாகிகள் அஜீஸ்,அல்லாபிச்சை,இஸ்மாயில் மற்றும் சஃபி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
Post a Comment