அதிராம்பட்டினம் அருகே மிலாரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி புஷ்பவல்லி (70), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 4 பெண்கள் இருந்த நிலையில் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். புஷ்பவல்லியின் கணவர் வீரப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் புஷ்பவல்லி மட்டும் தனியாக வசித்து வந்தார். நிலையில் புஷ்பவல்லி திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டது. இதுபற்றி அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் புஷ்பவல்லியின் மருமகள் உமாராணி மற்றும் வேலையாட்கள் புஷ்பவல்லியின் வீட்டை சுத்தம் செய்துள்ளனர். அப்போது சமையல் அறையில் கீழே உள்ள விறகு கட்டைகளை அப்புறப்படுத்திய போது அங்கு புஷ்பவல்லியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசார் விரைந்து வந்து புஷ்பவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment