பட்டுக்கோட்டை துணியகம் நடத்திய போட்டியில் புதுப்பட்டினம் மக்தப் மாணவ,மாணவிகள் அசத்தல்.!

 


பட்டுக்கோட்டை தங்க தமிழன் துணியகம் சார்பில் ரமலானே வருக என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி,கிராஅத் போட்டி,வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் புதுப்பட்டினம் சேர்ந்த மாணவ,மாணவிகள் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகள் வென்றனர்.குறிப்பாக கிராஅத் போட்டியில் முதல் பரிசை பஹ்சின்காமில் கோப்பையும், ₹5,000/- ரூபாய் ரொக்க பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.

பேச்சுப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ஆதிஹா பதக்கத்தையும், ₹2,000 ரூபாய் ரொக்கப் பரிசுத் தொகையையும் வென்றார்.மேலும் போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்ற புதுப்பட்டினம் ஜமாஅத்தார்கள் நேரில் அழைத்து பாராட்டினர்.




Post a Comment

Previous Post Next Post