மல்லிப்பட்டினம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை தலைமை ஆசிரியர் துவக்கி வைத்தார். ஊரின் அனைத்து சந்திப்புகளிலும் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும். பள்ளி செல்லாக்குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்ற வாசகங்களை கையில் ஏந்தியபடி மாணவர்கள் பேரணியில் ஊர்வலமாக சென்றனர்.

1 Comments

  1. தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post