நீட் தேர்வு ஆர்ப்பாட்டம் அதிமுக நடத்தும் நாடகம் பட்டுக்கோட்டையில் திமுகவினர் துண்டு பிரசுரம் வினியோகம்.!



தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் தொழில்துறை அமைச்சர்  ராஜா  உத்தரவின்படி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் பழனிவேல்  தலைமையில், பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை முன்னிலையில் 

நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதித்து பல மாணவர்களின் உயிரை பறித்து தற்போது அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாடகத்தை நடத்தும்  அதிமுகவை கண்டித்து, 

தஞ்சாவூர்  தெற்கு  மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் அதிமுகவை கண்டித்து பட்டுகோட்டை  கடைத்தெருவில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட துணை, தொகுதி, ஒன்றிய, நகர ஒருங்கிணைப்பாளர்கள் & மாணவர் அணியினர் கலந்துகொண்டனர். 






Post a Comment

Previous Post Next Post