மதுக்கூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த மமக துணைப்பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா பங்கேற்பு.!



 


தஞ்சை தெற்கு மாவட்டம்,மதுக்கூரில் பல்வேறு நிகழ்வுகளில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா பங்கேற்றார்.

மதுக்கூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்,மமக மதுக்கூர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாணவர்களை கௌரவித்து, மேல்படிப்புக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் இதில் மாவட்ட தலைவர் அதிரை இத்ரிஸ்,மமக மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டிணம் பஹத்,மமக மாவட்ட துணைச்செயலாளர் மதுக்கூர் புரோஸ்கான்,மதுக்கூர் பைசல்,மதுக்கூர் ராவுத்தர்,மதுக்கூர் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post