*தஞ்சை பாரளுமன்ற தொகுதி திமுக கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் யார் இவர்.....?*

Pazhani Manickam
தஞ்சாவூர்: தஞ்சைத் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்று சாதனை படைத்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 5வது முறையாக வெற்றியை எதிர்நோக்கி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.


சட்டம் பயின்றவரான பழனிமாணிக்கம், நாட்டாணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். முக்குலத்தோர் சமுதாயத்தில், கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்.

மகேஸ்வரி என்ற மனைவியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் பழனிமாணிக்கம்.

தஞ்சை தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்ற சாதனையை வைத்திருந்தாலும் கூட 84, 89, 91 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியும் உள்ளார். மொத்தத்தில் இது இவர் போட்டியிடும் 8வது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.


அமைச்சர் கோ.சி.மணியுடன் மோதிய இவருக்கு இம்முறை சீட் கிடைக்காது என்றார்கள். எப்படியோ சீட்டை வாங்கிவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post