தஞ்சாவூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வானது வேக்சின் எக்ஸ்பிரஸ் மூலம் ஒலிபெருக்கியைகொண்டு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சேதுபாவாசத்திரம் கடைவீதிகளிலும் மற்றும் கடற்கரையில் வசிக்கும் மீனவ மக்களுக்கும் கடற்கரை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வை வட்டார மருத்துவ அலுவலர் திரு ராமலிங்கம் மற்றும் மருத்துவ அலுவலர் திருமதி திரோஸா மற்றும் கிராம சுகாதார செவிலியர் சாந்தி ஒருங்கிணைத்தவர்கள் சாத்தி தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட அலுவலர் திரு ரமேஷ் மற்றும் கொரோனா தடுப்பூசி ஊக்குவிப்பாளர்கள் நித்தேஷ், பிரபாகரன், அன்னலட்சுமி, ரேவதி.

Post a Comment