சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் கேட்போம் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி.!

 


வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்போம் காதர்மொய்தீன் பேட்டி .

இந்திய யூனியன். முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன் தஞ்சையில் நிருபர் களிடம் கூறியதாவது:-

கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதியன்று என் னென்ன கோவில்கள், மசூதி கள், தேவாலயங்கள் உள் ளிட்ட மத வழிபாட்டுத்தலங் கள் இருந்ததோ அவற்றை யெல்லாம் பாதுகாக்கவேண் டும் என நரசிம்மராவ் பிரதம் ராக இருந்தபோது வழிபாட் டுத் தலங்கள் சட்டம் 1991 கொண்டுவரப்பட்டது. இதில் பாபர் மசூதிக்கு மட் டும் விதிவிலக்கு அளிக்கப்பட் டது.

இந்த சட்டத்தின்படி வழி பாட்டு தலத்தில் எந்த மாற் றத்தையும் அரசும், சமுதாயங் களும் செய்யக்கூடாது. அவ் வாறு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தையும் வேறுபாட்டையும், சண்டை சச்சரவுகளையும் உருவாக்கு வது நியாயமானதல்ல. எனவே, இச்சட்டத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.கடந்த சட்ட சபை தேர்தலின் போது 3 சட்ட சபை தொகுதியில் போட்டியிட்டு நாங்கள் தோல்வி அடைந்தோம். அதனால் இந்த தேர்தலிலும் 3 தொகுதியே கேட் போம் என்று எண் ணாதீர்கள். தமிழ கத்தில் 234 சட்டசபை தொகுதி உள்ளதால் நாங்கள் 8 தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிட்டு வந்துள் ளோம். அது தான் எங்களு டைய இலக்கு. ஆனால் தற் போது முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் வருகிற சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 6 சட்டசபை தொகு திகள் கேட்போம். அதற்கான பேச்சுவார்த்தையை நாங்கள் தொடங்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில செயலாளர் ஷாஜகான், தஞ்சை மாவட்ட செயலா ளர் ஜெயினுலாபுதீன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Post a Comment

Previous Post Next Post